President addresses Nation - காணிகளை திருப்பியளிப்பதில் தவறில்லை - ஜனாதிபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,978 Views
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கே திருப்பி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கே திருப்பி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாம் பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு ஊடங்களின் வாயிலாக வெளியிட்ட விசேட அறிவிப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் வடக்கை போலவே, கொழும்பு நகரிலும் இராணுவத்தினரால் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் தங்களின் காணிகளை திருப்பி வழங்க வேண்டும்.
ஆனால் இது பிழையாக பிரசாரம் செய்யப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் கடந்த 100 நாட்களில் ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.