இந்தியா சத்தீஸ்கரில் காவற்துறையினருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள புஜாரி கன்கேர் பகுதியில், மாவோயிஸ்ட்கள் பதுங்குழிகளை குறிவைத்து சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில காவற்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றுள்ளது.
இதில் 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஒரு காவற்துறை அதிகாரி படுகாயமடைந்தார்.
அந்த பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
இந்த சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவரான ஹரிபூஷான் கொல்லப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.