இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
22 பேர் கொண்ட தமிழக மீனவர்களின் குழு ஒன்று வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்திருந்தது.
இதன் போது சுஷ்மா சுவராஜால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தங்களை இலங்கை கடற்பரப்பில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு கோருவதற்காகவே தமிழக மீனவர்கள் அவரை சந்தித்திருந்தனர்.
எனினும் எதிர்வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டால், அவர்களை விடுவித்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.