பிரித்தானியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்சர்வேடிவ் கட்சி 331 ஆசனங்களை வென்றுள்ளது.
இதன் மூலம் அந்த கட்சியின் வேட்பாளர் டேவிட் கமரூன் இரண்டாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இரண்டாம் உலக யுத்தத்தின் 70 வது நினைவுநாளில் கலந்துகொண்ட டேவிட் கமரூன் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த நாள் மறக்க முடியாத நாள் எனவும், பிரித்தானிய மக்கள் ஒன்றுப்பட்டு ஹிட்லரை வீழ்த்திய நாள் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தை அமைப்பது தொடர்பாக அனைத்து நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் விரைவில் வாக்கெடுப்பு நடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஒன்றிணைந்த பிரித்தானியாவை அமைப்பதே தனது நோக்கம். எனினும் ஸ்கொட்லாந்தை தனி நாடாக அறிவிப்பது தொடர்பாக எந்த வாக்கெடுப்பும் நடத்தப்படாது என்றும் டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளான வேல்ஸ் அதிகார பகிர்வு ஸ்கொட்லாந்து அதிகார பகிர்வு ஆகியவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.