கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா'. இந்தப் படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார் என்பது இப்பொழுது கிடைத்த செய்தி. . இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது திகதிகள் ஒத்துவராமை காரணமாக, அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில், சமந்தாவும் தொடர்ச்சியாக விஐபி 2, 24,விஜய் 59’என பிசியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தற்போது மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து கௌதம் மேனன் இவரைத் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் படம் தெலுங்கிலும் தமிழிலும் உருவாகவுள்ளதால், தெலுங்கில் நாக சைத்தன்யா ஹீரோவாகவும் தமிழில் சிம்புவும் நடிக்கவுள்ளார்கள். இந்த இரண்டு மொழிகளிலும் மஞ்சிமாவே நடிக்கவுள்ளார் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
-கோடம்பாக்கக் குருவி-