அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. விஜய் இப்போது புலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுப்பயணம் போகவிருக்கிறாராம்.
விடுமுறைக்கொண்டாட்டமான அந்தப்பயணத்தை முடித்துவிட்டு அட்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்பக்கம் படத்தின் முதல் பாதிக்கான லொகேஷன் பார்த்து வைத்திருக்கிறார்களாம். முதல் பாதியை சீனாவில் எடுக்கவிருக்கிறார்களாம். அதற்காக இயக்குநர் அட்லி சுமார் ஒருமாதம் சீனா போய்விட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்டுத் தெரியவேண்டும் என்பதற்காக நிறைய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாராம் அட்லி. இதனால்தான் பெரும்பகுதிப் படப்பிடிப்பைச் சீனாவில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அனேகமாகப் படப்பிடிப்பு தொடங்குவதே சீனாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுவரை பாடல்காட்சிகளுக்காக மட்டும் வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருந்தார் விஜய். இந்தப்படத்தில்தான் காட்சிகளும் வெளிநாட்டில் படமாக்கப்படவிருக்கிறது.
முக்கியமாக, விக்ரமின் ஐ பார்த்த பாதிப்புதான் இந்த இடத்தெரிவுக்கான காரணமாக இருக்கலாம் என்பது எங்கள் ஊகம்.
ஹீ ஹீ ஃஏஏஏஏ
-கோடம்பாக்கக் குருவி-