Gov. to seek the help of Common Wealth over Gota's FR - கோட்டாவின் மனு குறித்து பொதுநலவாய நாடுகளிடம் ஆலோசனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,687 Views
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றம் அணுகுகின்றமை தொடர்பில், பொதுநலவாய நாடுகளின் நீதிபிரிவின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
பிரதமர் ரணில்விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த மனு தொடர்பில், செய்தி ஊடகங்களின் வாயிலாகவே தெரிந்துக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.