Report on Wilpathu - வில்பத்து குடியேற்றம் குறித்து அறிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,070 Views
வில்பத்து - வடக்கு புனித பூமியின் ஒரு பகுதியிலும், கல்லாறு வனப்பகுதியிலும் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
தேசிய பிக்குகள் சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வில்பத்து சரணாலயத்தை இந்த சங்கம் ஆய்வு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு ஆதரவானவர்களை குடியேற்றுவதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த வனப்பகுதியை அழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதனை தடுக்குமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டிருந்தார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றார்.
எவ்வாறாயினும் அங்கு குடியேற்றங்களுக்காக வனப்பகுதி அழிக்கப்படுகின்றமை, ஆதாரங்களுடன் எமது சகோதர தொலைக்காட்சியான ஹிரு ரீ.வியின் சீ.ஐ.டி. நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.