2,330 Views
கடந்த இரு நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை குறித்த விவாதம் தீவிரமாக இருந்து வருகிறது. தாடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் சலூன் கடை நோக்கி படையெடுத்து தங்கள் தாடியை மழித்து அபிநந்தன் மீசை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் ஏராளமான சலூன் கடைகளில் அபிநந்தனைப் போல் மீசை வைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால், இளைஞர்கள் மத்தியில் இந்த மீசை டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சாந்த் முகமது(வயது 32) கூறுகையில், "அபிநந்தன் துணிச்சல் மிக்க வீரர். அவரின் மீசை எதிரிகளுக்கு அச்சத்தையும், வீரத்தையும் பறைசாற்றுகிறது. சல்மான்கான், அமீர்கான் என்னுடைய ஸ்டைல் குருவாக இருந்தாலும், அபிநந்தன்தான் என்னுடைய குரு. அதனால் அவரைப் போல் மீசை வைத்தேன். செகந்திராபாத்தில் உள்ள என்னுடைய உறவினர் அபிநந்தன் போல் மீசை வைத்து இன்று காலையில் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பினார். அதைப் பார்த்து நானும் வைத்துக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.