மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறுபட்ட சுபாவங்கள் இருக்கின்றன. அன்பாக அக்கறையாக இருத்தல், பொறுமை, விட்டுக்கொடுக்கும், மனப்பான்மையுடன் இருத்தல், புத்திசாலித்தனம் அல்லது ஏமாளியாக இருப்பார்கள். இப்படி இந்த வகை குணாதிசயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் சிலர் தமக்கு பிடித்தவர்கள் தொடர்பாக அநியாயத்திற்கு அதிகம் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். வேறும் சிலர் மற்றவர்கள் குறித்து ஏதாவது குற்றம் குறைகளை பேசுவதே ஒரு முக்கிய கருமமாக செய்வார்கள்.
இந்தநிலையில், அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில் 16 மணி நேர வழக்கமான பணிகளில், சுமார் 52 நிமிடங்கள் மக்கள் புறணி பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுவதும் உண்டு. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இளம் வயதினர் தங்களுடன் வேலை செய்யும் வயதான சக ஊழியர் குறித்து அதிகமாகப் புறணி பேசுவதாகக் கூறியுள்ளது.
எனவே இந்த ஆய்விற்காக 467 பேர் கலந்துகொண்டிருந்தார்கள். அதில் 269 பெண்களும், 198 ஆண்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களை வைத்து ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் மிகவும் சுவாரசிய முடிவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் உள்ளார்ந்த சிந்தனைகள் கொண்ட, வெடுக்கென பேசாத, உதவி செய்யாத மக்களைக் காட்டிலும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்கள்தான் அதிகமாகப் புறணி பேசுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள்தான் அதிக நேரம் புறணி பேசுகின்றனர். அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை புறணிகள் சரி சமமாக இருக்கின்றன. புறணி என்பது பிரபலங்களைக் காட்டிலும் தங்களுக்கு அதிகம் பரிச்சயமானவர்கள் தொடர்பிலேயே பேசுகின்றனர். அதேசமயம் குறைவான கல்வி அறிவு கொண்ட மக்களைக் காட்டிலும் நன்கு படித்த மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே அதிகமாகப் புறணி பேசுவதாகக் இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது