33,759 Views
இச்சம்பவ த்தை தொடர்ந்து இலங்கை மற்றும் சில நாடுகள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதில் யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நீதிமன்றத்தை தாக்கும் நிலை வரை சென்றது.
இதனையடுத்து அங்கு சேவையாற்றி வந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ள போதிலும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, யாழ் நீதிமன்றம் மீது கற்களை வீசினார்கள் மற்றும் கலகத்தை விளைவித்தார்கள் என்ற பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூவரும் தற்போது அனுராதபுரம் சிறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் யாழ் நூலகத்தை பார்வையிட சென்றவர்கள் எனவும் , பார்வையிட்டு பின்னர் திரும்புகையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறி , இவர்களை விடுவிக்கும் முயற்சியில் இந்திய தூதுவரலாயம் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இச் சம்பவத்தின் பின்னர் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென மக்களிடமிருந்து கோரிக்கைகள் விடுவிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.