4,938 Views
ஆண் வேடமிட்டு , பெண்ணொருவரை திருமணம் செய்து சுமார் 8 ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ் விநோத சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
அப் பெண்ணின் உண்மையான பெயர் குசும் தசநாயக்க எனினும் அவர் தனது பெயரை கசுன் தசநாயக்க என மாற்றி வைத்திருந்துள்ளார்.
அவர் பார்ப்பதற்கு ஆண் போல தோற்றமளிப்பதால் யாரும் சந்தேகம் கொள்ளவில்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பணி புரிவதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தன் கணவர் தன்னை கவனிப்பதில்லையெனக் கூறி அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்பின்னரே உண்மை வெளியாகியுள்ளது. மேலும் குறித்த பெண் போலியாக அடையாள அட்டை உட்பட ஆவணங்களை தயார் செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
தாம் கணவன், மனைவியாக வாழவில்லையெனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அவர் பின்னர் மாத்தறை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.