சிவாஜி கணேசன் 'நவராத்திரி' என்ற படத்தில் ஒன்பது கேரக்டர்களிலும், கமல்ஹாசன் 'தசாவதாரம்' என்ற படத்தில் பத்து கேரக்டர்களிலும் நடித்து சாதனை செய்தனர். ஆனால் நடிகைகளின் மத்தியில் இதுபோன்ற சாதனையை செய்ய யாரும் இல்லை என்று நினைத்து வந்த நிலையில் தற்போது மலையாள நடிகை மைதிலி, தான் நடிக்கும் படம் ஒன்றில் பத்துவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம்.
கோட்சே" என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஒரு மலையாள படத்தில் மைதிலி, நாடக நடிகையாக நடித்து வருகிறாராம். கதைக்கேற்ப அவர் பல வேடங்களில் நடித்து வருவதால் பத்துவித கெட்டப்புகள் அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. மைதிலி நடிக்கும் பத்து கேரக்டர்களில் கற்புக்கரசி கண்ணகி, மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி ஆகிய கேரக்டர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வினய் போர்ட் என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார்.
நடிகை மைதிலி ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'லோஹம்' என்ற படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-