16,916 Views
முன்னாள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தையில் எந்தவிதமான வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த மிதக்கும் சந்தையின் சுற்றுச்சூழலில் வீசுகின்ற துர்மணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதை விட முக்கியமானதொரு காரணத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வரும் காதல் ஜோடிகள் நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் அங்கு வர்த்தகம் செய்வோர் முறையிடுகின்றனர்.
மிகவும் அநாகரிகமாக அவர்கள் நடந்துகொள்வதாகவும் , குறிப்பாக மாலையில் அங்கு நடக்கவே முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு முன்னால் இந்த மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.