13,072 Views
சேயாவை கொலை செய்தது தானே என' கொண்டயா' என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரர் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இதேவேளை கொண்டயாவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொண்டயாவின் சகோதரர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னர் இக்கொலையை தானே புரிந்ததாக கொண்டயா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். எனினும் தற்போது கொண்டயாவின் சகோதரர் புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இக்கொலை தொடர்பில் கொண்டயா வெவ்வேறான சந்தர்ப்பங்களில் முரண்பாடான தகவல்களை வழங்கிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இக்கொலையை தானே புரிந்ததாகவும் , பின்னர் சகோதரனுக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ள கொண்டயா பின்னர் இக்கொலையுடன் தான் சம்பந்தப்படவில்லையெனவும் உண்மையான கொலைக்காரர் சகோதரனே எனவும் தெரிவித்திருந்துள்ளார்.
கொண்டயாவின் சகோதரர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவரின் தகவலின் அடிப்படையில் கொண்டயா கைதுசெய்யப்பட்ட தன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.