23,727 Views
இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்.
அவரது கணவன் கே.சரவணன் (26) மற்றும் கணவரது நண்பன் அஹமட் லத்தீப் (23) ஆகியோராலேயே அவர் வெட்டப்பட்டுள்ளார்.
அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரியவருகின்றது.
சந்தேகநபர்கள் இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாகாத போதிலும் , விவாகரத்து தொடர்பான முரண்பாடே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியும் வெளியாகியுள்ளது.
(0.38 நிமிடத்திலிருந்து பார்வையிடவும் , தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதை தவிர்க்கவும்)