வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பெண்களுக்கு நடிகை நயன்தாரா உதவி செய்துள்ளார்.
பல வருடங்களாக தமிழ் திரை படங்களில் கொடிக் கட்டி பறக்கும் நயன்தாரா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ முடிவு செய்தார்.
சகோதரிக்கு சாஸ்நேயம் (Sahodarikku Sasneyam - To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக இந்த உதவியை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார்.
1000 பேருக்கு உதவக் கூடிய இந்தப் பொருட்கள், உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப்பட்டவை. இன்று அவற்றை விநியோகிக்கவிருக்கின்றனர்.