Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி – தொழிற்சங்கங்கள்

#sooriyanfm #news - பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி – தொழிற்சங்கங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,176 Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்க நவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச, மித அரச மற்றும் தனியார்த்துறை தொழிற்சங்க ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை மாலை 6.15 வரையில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

அரச பணியாளர்களின் ஓய்வூதிய குறைப்பு, அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் வேதனம், அடிப்படை வேதனத்துடன் இணைக்கப்படாமை, மனிதவள பணியாளர்களுக்கு நிலையான நியமனம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் நிதி அமை;சர் ரவிகருணாநாயக்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும் பங்குபற்றி இருந்தனர்.

எனினும் இதன்போது தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவையும் முன்வைக்க்பபடவில்லை என்று, அரச, மித அரச மற்றும் தனியார்த்துறை தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதன்படி தொடருந்து திணைக்கள தொழிற்சங்கம் எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை அரம்பிக்க தயாராக இருக்கிறது.

தங்களின் பிரச்சினைகளுக்கு 48 மணித்தியாலத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால், இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கல்வித் துறை சார்ந்தவர்களும் எதிர்வரும் 15ம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top