3,784 Views
தேசியவாதம் , மேலைத்தேய சதி என ஊடகங்களிலும் , மேடைகளிலும் முழங்கும் விமல் வீரவங்ச தொடர்பில் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச வீடமைப்புதுறை அமைச்சராக செயற்பட்ட காலகட்டத்தில் உறவினர்களுக்கு பக்கசார்பான உதவிகளை வழங்கியதாக பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான வீடுகளை வழங்கியமை தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முன் எடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வீடமைப்பு அதிகார சபையினால் மத்தேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐந்து வீடுகளில் நான்கை எந்தவித கட்டணமும் இன்றி நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆதரவாளராக செயற்பட்ட நிரோஷா நாணயக்காரவிற்கு குறைந்தவிலையில் மாளிகாவத்தை வீடமைப்பு செயற்திட்டத்திலுள்ள வீடொன்றை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.