வம்பு சண்டைக்காக வாயில் பிளாஸ்டர் போடவில்லை-கிரண் பொல்லார்ட் .
நேற்று இடம்பெற்ற IPL போட்டியில் மும்பாய் அணியின் அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்க்கொண்டு சிறிது நேரம் களத்தடுப்பு செய்தார்.
தகராறு செய்யும் நோக்கத்தில் வாயில் பிளாஸ்டர் போட்டுக்கொள்ளவில்லை என்று இப்போது மும்பாய் இந்தியன்ஸ் வீரர் பொல்லார்ட் விளக்கம் அளித்துள்ளார்.
ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலிடம் நேற்று மைதானத்தில் தேவையற்ற வாய்த்தகராறில் பொல்லார்ட் ஈடுபட நடுவர் அதனைக் கண்டித்த நிலையில் பிளாஸ்டருடன் மைதானத்திற்குள் களத்தடுப்புக்கு வந்தார் பொலார்ட்.
நடுவரை அவமதிப்பது போல இருந்த பொலார்டின் செயலை இந்திய ஊடகங்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் டிவிட்டர் தளத்தில் பொலார்ட் இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
" நான் தப்பு செய்தால் அதனை ஒப்புக்கொள்வேன். ஆனால் தப்பே செய்யாமல் என்னை பிடித்து உள்ளே இழுத்துவிடாதீர்கள்"
என்று பொல்லார்ட் விளக்கம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த 4 போட்டிகளின் தோல்விக்கு பின்னர் நேற்று ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணி 18 ஓட்டங்களால் முதல் வெற்றியைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
*T.T