இப்பொழுதெல்லாம் படங்களின் பாகங்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாய் எடுப்பது, ஒரு வழக்கமாகி விட்டது. இதற்க்கு பல உதாரணங்களை சொல்லலாம். அண்மையில் வந்த காஞ்சனா 2 கூட இந்த வரிசையில் வந்த ஒரு திரைப்படம்தான்.
பலரும் பலவகையில் புகழ்ந்து பாராட்டி வரும் படமாக இந்தப்படம் மாறியுள்ளது. இவ்வாறு பல படங்கள் வரிசை கட்டி நிற்கையில், கொஞ்ச காலத்துக்கு முன்னமாக வந்த படம் தான் சுந்தர்.சி எடுத்திருந்த அரண்மனை.
சுந்தர்.சி, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி , ஹன்சிகா மேத்வானி, கோவை சரளா போன்ற பலரும் நடித்திருந்தார்கள். முதலுக்கு மோசமில்லாமல் படமும் ஓடியது.
இந்நிலையில், அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக சுந்தர்.சி அறிவித்துள்ளார். அதே நட்சத்திர பட்டாளம் இதிலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். யார் யார் நடிக்கிறார்கள், யாரெல்லாம் விலகுகிறார்கள் என்று!!
-கோடம்பாக்கக் குருவி-