1,429 Views
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ் இன்று பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் உடல்நிலை கருதி அவரது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன் பசிலுடன் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் பணிப்பாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க ஆகியோரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.