லிபியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தடுப்பதற்கான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் யோசனையை லிபியாவின் இராணுவம் நிராகரித்துள்ளது.
சீ.என்.என். ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், லிபியாவின் இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தார், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
ஆயிரக் கணக்கான அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கி பயணிக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில் அகதிகளை படகுகளில் ஏற்றும் ஆட்கடத்தல் காரர்களை இலக்கு வைத்து இராணுவ நடவடிக்கையை எடுக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
எனினும் இதற்கு லிபிய ராணுவம் ஒருபோதும் ஒத்துழைக்காது என்று அவர் கூறியுள்ளார்.