கமல்ஹாசன் சத்தமில்லாமல் படங்களை முடிக்கின்ற வித்தை தெரிந்தவர். உத்தம வில்லன், பாபநாசம் இரு படங்கள். அதில் உத்தம வில்லன் ரிலீஸும் ஆகிவிட்டது.
இந்நிலையில் அடுத்த புதிய படமாக ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இப்படம் ஆக்ஷன் த்ரில்லாராக உருவாக இருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த படத்திற்கு முதலில் ‘ஒரே இரவு’ எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது ஆனல் தற்போது ‘தூங்கா வனம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அத்தோடு, இந்தப் படத்தில் கமலுக்கு 3 ஜோடிகள் என்று சொல்லப்படுகிறது. மனிஷா கொய்ராலா மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் முக்கியமாக பாத்திரத்தில் வருகிறாராம். மேலும் த்ரிஷா இப்படத்தில் இரண்டாவது முறையாக கமலுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் எனவும். அதே போல் ’காவியத்தலைவன்’ படத்தில் நடித்த அனைகா ஷோடியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இவர்கள் தவிர்த்து பிரகாஷ் ராஜ் ஒரு கேரக்டரிலும் நடிக்கிறார். வழக்கம் போல் கமலின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் கமலோடு இன்னுமொரு நடிகரும் இணையவுள்ளதாக நமக்கு தகவல்கள் கசிந்துள்ளன.
-கோடம்பாக்கக் குருவி-