4,646 Views
கடந்த 9 ஆம் திகதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது டேவிட் மில்லர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி அலோக் அச்சியின் வலது கண் பகுதியில் பட்டது.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் கண் பார்வையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இது தொடர்பில் டேவிட் மில்லர் டுவிட்டர் ஊடாக கவலை வெளியிட்டுள்ளார்.
”இந்த விபத்து மிகுந்த அதிர்ச்சி மற்றும் துக்கத்தை அளித்துள்ளது, இழப்பால் வாடும் அலோக் அச்சிக்காக கடவுளை பிரார்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.