3,390 Views
இத்தகைய ஹோட்டலுக்கு காதலர்கள் மற்றும் தம்பதிகள் அதிகளவில் வந்து செல்வதாக அவற்றை நடத்திச் செல்வோர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக விடுமுறை தினங்களில் இங்கு அறைகளை பதிவுசெய்துகொள்வதற்கு போட்டியே நடக்குமெனவும் அந்தளவுக்கு ஜோடிகள் இவற்றுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய ஹோட்டல்களில் குறிப்பாக சிறிய ஹோட்டல்களின் பின்னணியில் நடக்கும் வில்லங்கமான சமாச்சாரங்கள் தொடர்பில் பலர் அறிந்திருப்பதில்லை.
ஹோட்டல் அறைகளில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பரவ விடுகின்றமை , அல்லது குறிப்பிட்ட ஜோடிகளிடம் பணத்தை கேட்டு அச்சுறுத்தல் விடுவிப்பது பழைய விடயம்.
ஆனால் தற்போது நிலமை சற்று மாறிவிட்டது. ஆம் , நான்கு சுவற்றுக்குள் நடக்கும் அந்தரங்கங்களை நேரடியாக பலரை பார்க்கச் செய்து பணம் அறவிடுகிறார்களாம்.
இதுவும் அறையில் நடப்பவர்களுக்கெ தெரியாமலேயே நடைபெறுவதாகவும் இதனோடு தொடர்புபட்ட ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார்.
அவர் கூறிய திடுக்கிடும் தகவல்களில் சில உங்களுக்காக:
" தம்பதிகள் , இளம் ஜோடிகள் தங்களது இச்சைகளை பூர்த்தி செய்ய இங்கு வருகின்றனர், அதற்காக அறையை மணித்தியால வாடகைக்கு எடுக்கின்றனர்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கு மேலதிகமாக பணம் சம்பாதிக்க நாம் உபயோகிக்கும் வழியே இது, நேரடி காட்சி " லைவ் ஷோ' அறைக்குள் நடப்பவற்றை நேரடியாக சிலருக்கு காட்டி அதன் மூலம் பணம் பெறுகின்றோம்.
ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 துளைகள் வரை போடப்பட்டிருக்கும் இதனை எவராலும் கண்டுபிடிக்க முடியாது, அத்துளையின் வழியாக மற்றைய பக்கத்தில் இருந்து அறைக்குள் நடக்கும் விடயங்களை நேரடியாக பார்வையிட முடியும் இதற்காகவே இக்கட்டணத்தை வசூலிக்கின்றோம்.
ஒருவரிடம் இருந்து அதிகபட்சமாக 1000 ரூபா வரையில் அறவிடுகின்றோம்.
இங்கு அனைத்தும் நேரடி, எனவே கேள்வி அதிகம், ஆனால் எவரும் கையடக்கத்தொலைபேசியாலோ வேறு உபகரணங்களாலோ பதிவு செய்ய முடியாது, அதற்கு அனுமதி வழங்குவது இல்லை" என்றார்.
இவ்விடயம் குறித்து , லங்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க முன்னாள் அனுர லொக்குஹெட்டியிடம் நாம் வினாவியிருந்தோம்.
இதன்போது எமக்கு கருத்து தெரிவித்த அவர் இத்தகைய விடயங்கள் நடப்பது உண்மையேயெனவும், சிறிய ஹோட்டல்களிலேயே இதுபோன்ற விடயங்கள் நடைபெறுவதாகவும் , இது குறித்து அங்கு செல்வோர் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.