கடந்த அரசாங்கத்தினால் பெறப்படட வரையறையற்ற கடன்கள் காரணமாக நாட்டின் மூழு கடன்தொகை 8999 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டளவில் அந்த தொகை 1784 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்தநிலையில், அரச வங்கிகளின் செயற்பாடுகளை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் வெளியிட்டு வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்பட்ட பிரமுக வங்கியின் வைப்பீட்டாளர்கள் 8200 பேரின் வைப்பீட்டு நிதியை மீளளிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது.
கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலங்கள் தாமதமடைந்து வந்த குறித்த நிதிவழங்கல் நடவடிக்கைகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.