Khawatta protest - கஹவத்தையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,696 Views
இரத்தினபுரி - கஹவத்தை - கொட்டகெத்தன பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, கஹவத்தையில் நேற்று இரவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
காவற்துறை ஊடகப் பேச்சிளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் போது கஹவத்தை பகுதயில் உள்ள வீடொன்றில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் சம்மந்தமில்லை என்பதையும் காவற்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2012ம் ஆண்டு ஜுலை 19ம் திகதி இடம்பெற்ற இந்த கொலைவழக்கில் சந்தேக நபர்களாக காணப்பட்ட மூன்று பேர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.