CB. Rathnayake's driver commits suicide - சி.பி ரத்நாயக்கவின் சாரதி தற்கொலை செய்ததன் காரணம் இதுவா? (காணொளி இணைப்பு)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,936 Views
காணாமல் போயிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி ரத்நாயக்கவின் சாரதியின் சடலம் கொழும்பு 7 பிரதேசத்தில், முன்னாள் அமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சாரதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி மாதிவெல – சுஹந்ர மாவத்தையில் அமைந்துள்ள, முன்னாள் அமைச்சர் சி பி ரட்ணாயக்கவின் சொந்த வீடு தீக்கிரையானது.
இந்த தீவிபத்தின் பின்னர், முன்னாள் அமைச்சரின் சாரதி காணால் போயிருந்த நிலையில், இந்த தீக்கு அவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தீப்பரவல் குறித்த தம் மீது சந்தேகம் கொண்டுள்ளதாகவும், இதனால் தாம் மனவருத்தமடைந்துள்ளதாகவும் குறித்த சாரதி அவரது மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.