யால தேசிய சரணாலயம் எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனவள திணைக்களம் தெரிவித்துள்ளது.
விலங்களுக்கு சுதந்திரமாக நடமாடி நீர், உணவு உள்ளிட்ட விடயங்களை பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையிலேயே இது ஒரு மாத காலத்துக்கு மூடப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி சரணாலயம் மீண்டும் திறக்கப்படும்.
இந்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சரணாலயம் மூடப்பட்டிருக்குமே தவிர, நாளாந்த நிர்வாக பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.