சவுதியின் மினாவில் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 805 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
புனித ஹஜ் யாத்திரையின் போது, மவுண்ட் அரபாத் மற்றும் கிராண்ட் மசூதிக்கு இடையில் இடம்பெற்ற இந்த அனர்த்தில் மேலும் 805 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
மக்காவில் இடம்பெறும் ஹஜ் யாத்திரீகர்களின் இறுதி முக்கிய சடங்குகளில் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கொண்டனர்.
இதன்போதே இந்த சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் 150 பேரே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , அவ் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்த வண்ணமுள்ளது.
சுமார் 4000 மீட்புப் படையினர் மற்றும் 200 அவசர உதவிச் சேவை வாகனங்கள் அனர்த்தத்தையடுத்து உபயோகப்படுத்தப்பட்டன.