உலகில் மிக பெறுமதியாக கருதப்படும் நோபல் பரிசானது ,1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் என்பவர் சுவிடன் நாட்டை சேர்ந்தவர்.
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய துறைகளுக்காக வழங்கப்படும் நோபல் பரிசு மருத்துவ துறையிலும்
பங்களிப்பு செலுத்துவோருக்கும் அவர்களின் உயரிய சேவைக்காக வழங்கப்படுகிறது. இம்முறை வில்லியம் கேம்பல், சதொசி ஒமுரா, யுயு தூ ஆகிய மூன்று மருத்துவ ஆராய்ச்சி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
உருளை புழுக்களால் ஏற்படும் யானைக்கால் உள்ளிட்ட பல நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடித்தமைக்காக வில்லியம் கேம்பல், சதொசி ஒமுரா ஆகிய இருவருக்கும் ,அதுபோல
மனித அழிவில் அதிக தாக்கம் செலுத்தும் மலேரியா நோய்க்கான புதிய மருந்தை கண்டுபிடித்த யுயு தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வில்லியம் கேம்பல், சதொசி ஒமுரா ஆகிய இருவரும் கண்டுபிடித்த அவேமேக்டின் மருந்து யானைக்கால் வியாதி, பார்வையின்மை ஆகிய நோய்களை தாக்குவதில் இருந்து குறைத்துள்ளது.அத்தோடு யுயு தூவினால் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்தேமிசினின் மருந்து மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புக்களை
குறைத்துள்ளது.