2,213 Views
எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சிய நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து எவன்காட் நடவடிக்கைகள் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
எவன்காட் மிதக்கும் ஆயுத கப்பல் தொடர்பில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகிவந்தன.
இந்த அடிப்படையில் நேற்று முன்தினம் அமைச்சர் திலக் மாரப்பன தமது பதவி விலகலை அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று அந்த நிறுவனத்துடனான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.