16,495 Views
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விடிய, விடிய பெய்து வரும் கனமழையால், சென்னை நகரில் திரும்பிய திசை எல்லாம் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதாக தெரியவருகின்றது.
எனினும் , மழையை பலர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் , இணையத்தில் சுவாரஸ்யமான படங்கள் மற்றும் மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அவற்றின் தொகுப்பு.


