பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் திறன் சாம்பலுக்கு உள்ளது. நம் முன்னோர்கள் முந்தைய காலத்தில் சாம்பலைக் கொண்டு பற்களைத் துலக்கினார்கள். சாம்பல் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், நீங்களும் இதை முயற்சிக்கலாம்.
அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பற்தூரிகையினால் சாம்பலை உப்பு நீரில் நனைத்து பற்களை வழக்கம் போல துலக்க வேண்டும்.பின்பு வாயை நன்றாகக் கொப்பளித்து கழுவி விட வேண்டும் .
பால் பவுடர் பற்களை முத்துப் போன்ற நிறத்தில் மாற்ற உதவுவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு பற்தூரிகையின் மேல் சிறிது பால் பவுடரைத் தூவி அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை இட்டு பற்களைத் துலக்க வேண்டும்.
பற்தூரிகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றையும் கலந்து பல் துலக்க வேண்டும்.
பற்தூரிகையில் சிறிதளவு பேக்கிங் சோடாவைத் தூவி, சில துளிகள் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து,பற்களைத் துலக்க வேண்டும்.
இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் நீங்கும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை தவறாமல் தொடர்ந்து இரவு தூங்குவதற்கு முன்பு மேற்கொண்டு வந்தால் உங்கள் பற்களின் நிற மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.