வெந்தயக் கீரையில் விற்றமின்களும் , தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. பொதுவாக நமது அன்றாட உணவில் வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்துச் சாப்பிடலாம்.
நம் சமயலறையில் அஞ்சரைப் பெட்டியில் இருக்கும் வெந்தயத்தை விதைத்தாலே அருமையாக வந்துவிடும்.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றார்கள். இந்தக் கீரை வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகின்றது.
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உடல் உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை நீங்கும்.நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.