இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் 'தளபதி' விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் "ஜனநாயகன்" திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன. அந்தவகையில் கடந்த நாட்களில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்தியாவின் கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமத்தில் நடைபெற்று வந்தன.
இதற்காக 'தளபதி' விஜய் மற்றும் திரைப்படக் குழுவினர் மே 1ஆம் திகதி அப்பகுதிக்குச் சென்றிருந்தனர். அதிக மழை பெய்ததன் காரணமாக இடைக்கிடையே படப்பிடிப்புப் பணிகள் தடைப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் 'தளபதி' விஜய் பொதுமக்கள் மற்றும் இரசிகர்களை வீதியில் சந்தித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
தற்போது அப்பகுதியில் இத் திரைப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்புப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 'தளபதி' விஜய் இன்று சென்னை திரும்பவுள்ளார்.
'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.