12,011 Views
பத்திரிக்கையில் திருமண விளம்பரத்தின் ஊடாக சந்தித்த நபரொருவர் பெண்ணொருவரிடம் நகை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஆசிரியை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பத்திரிக்கையில் மணமகன் தேவையென விளம்பரமளித்துள்ளார்.
இவ் விளம்பரத்தின் ஊடாக தொடர்பு கொண்ட நபரொருவரே குறித்த ஆசிரியையை ஏமாற்றியுள்ளார்.
42 வயதான தான் இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்ட , லண்டனில் தொழில்புரிபவர் என தெரிவித்துள்ள கண்டிக்கு அழைத்துச் சென்றே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த இருவரும் விடுதியொன்றில் இரவுப் பொழுதை கழித்துள்ளனர். மேலும் அங்கு வைத்து முகத்தை துடைக்கும் பொருட்டு தாளொன்றை அவர் வழங்கியுள்ளார்.
அதன் மூலம் முகத்தை துடைத்த பின்னரே அப்பெண் மயங்கியுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து எழும் போது பேராதெனிய புகையிரத நிலையத்தில் இருந்ததாகவும் , தனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் கழுத்தில் இருந்த மாலை , கையடக்கத்தொலைபேசி ஆகியன களவு போயிருந்தமையையும் தெரிந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.