11,979 Views
தன்னிடம் பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளரிடம் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மரியாதை குறைவாக நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பேஷ் டி20 லீக்கில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும் நேற்று மோதின. இதில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
அந்த அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 15 பந்துகளில் 41 ஓட்களைபெற்று ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் தனியார் தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளர் ஒருவர் கெயிலை பேட்டி எடுத்தார். அப்போது கெயில், ''நானே உங்களிடம் வந்து பேட்டி கொடுக்க விரும்பினேன். அதனால்தான் தற்போது உங்கள் முன்பு நிற்கிறேன். உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். இட்ஸ் நைஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அதன் பிறகு நாம் மது அருந்தலாம். don't blush baby" என்றார்.
கெயிலின் இந்தப் பேச்சைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிகையாளர், சுதாரித்துக் கொண்டு ''நான் வெட்கப்படவில்லை'' எனக்கூறி பேட்டியை தொடர்ந்தார்.
கெயிலின் இந்த செயல் பெரும் சர்ச்சையை எடுத்தியிருப்பதோடு, அவருக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது இது தொடர்பில் கிறிஸ் கெயில் மன்னிப்புக் கோரியுள்ளார்.