சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 85 பொது மக்களும் 50 சிரிய துருப்பினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சிரியாவில் உள்ள டியர் அல் சோர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருந்த போதிலும் சிரிய அரசாங்க சானா செய்திப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுமார் 300 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முற்றுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் நிலை மிகவும் பாரதூரமாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்த பிரதேசங்களில் 2 லட்சம் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பாதிப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் ரஷ்ய விமானங்கள் அத்தியாவசிய பொருட்களை போட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.