சகலராலும் கவரக்கூடிய பாத்திரங்களை ஏற்பது மட்டுமல்லாது அவற்றினை சிறப்பாக நடித்து வரும் நடிகர்களில், விஜய்சேதுபதிக்கு தனி இடமுண்டு.
தமிழ் திரையுலகில் அறிமுகமாவதே ஒரு பெரிய சாதனை. அறிமுகமாகிவிட்டால் அது மிகப்பெரிய சாதனை. ஆனால் அறிமுகமாகிய பின்னர் கிடைத்த பெயரையும், வெற்றியையும் நிலை நிறுத்திக் கொள்வது மிக மிகப் பெரிய சாதனை.
சில நட்சத்திரங்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைத்து அவர்களை மெகா நட்சத்திரங்களாக மாற்றி விடுகிறது. அதன்பின்னரான
தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளத் தெரியாத பலர் பெயரே தெரியாமல் போன சம்பவங்களும்உண்டு. அவற்றை
காப்பாற்றிக் கொண்டவர்களே இன்று மெகா நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறனர்.
2012 ம் ஆண்டில் நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தன. அதே போன்றே 2013 ம் ஆண்டில் சிறப்பான திரைப்படங்களை தந்திருந்தன.
ஆனால் 2015 ம் ஆண்டில் தனக்கேற்ற கதைகளை சரியாக தேர்வு செய்யாமல் தொடர்ச்சியாக 5 தோல்வித்திரைப்படங்களை விஜய் சேதுபதி தந்து விட்டார். எனினும் கடந்த ஆண்டில் வெளிவந்த ''நானும் ரவ்டிதான்'' படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது.
தற்போது ஒரே சமயத்தில் ''இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி, சேதுபதி, தர்மதுரை'' போன்ற படங்கள் அடுத்தடுத்த வெளியீடாக வரப்போகின்றன. இந்த திரைப்படங்களில் இறைவி, சேதுபதி போன்ற படங்களின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
தர்மதுரை படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
இத்தனை திரைப்படங்கள் கை வசம் உள்ள நிலையில், விஜய் சேதுபதி எந்த திரைப்படத்தை முதலில் வெளியிட்டால் தன்னுடைய பெயரை நல்லதாக அமைத்துக் கொடுக்கும்? என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென ரசிகர்களும்விநியோகத்தர்களும் அதிகமாக எதிர்ப்பார்க்கின்றார்கள்.
முதல் வெளிவரும் படம் வெற்றிப் படமாக அமைந்து விட்டாலும், அடுத்தடுத்த படங்கள் சிலவேளை தோல்வியடைந்துவிட்டால் பெற்ற பெயர் வீணாகி விடுமோ?.
இக்கட்டத்தில் விஜய் சேதுபதி எடுக்கப் போகின்ற முடிவு என்னவென்பதுஅவருக்கு மட்டும்தான் தெரியும்.