தெலுங்கில் அனுஷ்கா படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபாலி ஆகிய படங்களில் மிகவும் ஆர்வத்தோடு அம்மணி நடித்து வருகையில், தமிழிலும் அவரை இரசிகர்கள் விடுவதாயில்லை.
தமிழில், இரண்டாம் உலகம் படத்துக்குப் பின்னராக அனுஷ்கா-ஆர்யா இணையும் படமொன்று பூஜை போடப்பட்டுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் தயாராகும் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ''இஞ்சி இடுப்பழகி'' என்பது தமிழுக்கும், சைஸ் ஜீரோ என்பது தெலுங்குக்குமாய் பெயரிட்டுள்ளார்கள்.
மரகதமணி இசையமைக்க, மதன்கார்க்கி பாடல்களை எழுத, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயருக்கான காரணம், தேவர்மகன் படத்தில் கமல் ரேவதியைப் பார்த்து பாடும் இஞ்சி இடுப்பழகி பாடல் தான் என்று மகிழ்வோடு கூறுகின்றார் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் .
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-