ஹிந்தியில் இரசிகர்களை கவர்ச்சியில் கலங்கடித்து வருகின்றவர் நடிகை மல்லிகா செராவத். இவருக்கும் இவரது கவர்ச்சித் திருவிழாவுக்குமென எக்கச்சக்க இரசிகர்களுண்டு. அம்மணி என்றால் இறந்தவர் கூட எழுந்து நின்று ஆடும் அளவுக்கு பரபரப்புக்கும் கிசுகிசுக்கும் புகழுக்கும் சொந்தக்காரன் இவர்.
இந்நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட ''டர்ட்டி பொலிடிக்ஸ் '' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பின்வருமாறு மல்லிகா கூறியிருந்தார்.
''எனக்கு கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது. எப்போதும் கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனவே, சரித்திரம் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறும் படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அத்தோடு எனக்கு இந்திய தேசியத் தலைவி இந்திரா காந்தியை ரொம்பப் பிடிக்கும். அவரது வாழ்க்கைச் சரித்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். யாராவது நடிக்க வைத்தால் எனது சம்பளத்தையும் பாதியாகக் குறைக்கிறேன்'' என்றுள்ளார் மல்லிகா செராவத்.
நீங்க யோசிக்கலாம், என்னது இந்திரா காந்தியாக மல்லிகாவான்னு? யாராவது வைச்சு எடுத்தாலும் எடுப்பாங்கப்பா. செய்யக் கூடியவனுக தான் இந்த சினிமா உலகம்.
நீ மட்டும் மாறலையே மல்லிகா
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-