கூகுளை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்’கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவன தகவலின்படி கூகுளை பயன்படுத்தியோரில் 4 கோடியே 70 லட்சம் பேர் சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் கணிப்பின் படி இனி வரும் 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக நிபுணர் பிராங்கன் மூரே என்பவர் மறதி நோயை குணப்படுத்தும் சிகிச்சைமுறை தொடர்பாக ஆராய்ச்சி நடத்தியுள்ளார்.
இருப்பினும் அதற்கான விடை இன்னும் கண்டறியப்படவில்லை. மனிதனுக்கு மூளை என்பது மிக முக்கியமானதொன்று .எப்போதும் ஒரு வேலையை நாம் செய்யும் போது அதனை சிறப்பாக வித்தியாசமாக இலகுவான முறையில் செய்வதற்கு நாம் நமது மூளையை அதிகம் பயன்படுத்துவோம்.
எப்போதும் மூளை சிறப்பாக ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் நாம் நமது மூளைக்கு வேலை கொடுக்கவேண்டும் .இன்றைய காலத்தில் மூளைக்கு வேலை கொடுக்காமல் இணையதளங்கள் மற்றும் பல உபகாரணங்களைக்கொண்டுதான் வேலைகள் செய்யப்படுகின்றன.மறந்த ஒரு விடயத்தை மூளையை பயன்படுத்தாமல் கூகுளை தட்டிப்பார்த்து அறிந்துகொள்கின்றோம். இதன்காரணமாக மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்’கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படுவதாக நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.