3,788 Views
2,052 Views
3,319 Views
8,891 Views
1,885 Views
ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் – மாங்கா. இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்வா ஆர்.எஸ்
இசை – பிரேம்ஜி அமரன்
படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ்
கலை – Dr.ஸ்ரீ
நடனம் – அஜெய்ராஜ்
சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.எஸ்.ராஜா.
தயாரிப்பு – பி.சி.கே.சக்திவேல்
‘மாங்கா’ படம் பற்றி இயக்குநர் ஆர்.எஸ்.ராஜா சொல்லும் போது..
“இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.
இவனுடைய முட்டாள் தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி)யை சந்திக்கிறான்.
இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது.
இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை.” என்றார் இயக்குனர்.
கதை செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்போலருக்கே…
=== CASTRO RAHUL ===
4,845 Views
3,001 Views

7,472 Views
எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ் சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் ‘கைபேசி காதல்’. இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். திம்மம் பள்ளி சந்திரா இதனை இயக்கியுள்ளார்.
பலரது காதலுக்கு கைபேசி உதவுகிறது. அதனால் கைபேசி மீது மோகம் இன்று அதிகரித்து வருகிறது. ஆனால் கைபேசி என்கிற ஜடப் பொருள் மீதே காதல் கொள்கிறான் இளைஞன் ஒருவன் என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம்தான் ’கைபேசி காதல்’.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று, ‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்ட பேரரசு, “திறமை உள்ளவர்களுக்கு கர்வம், தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதைக்கு உரியது. திறமை இல்லாதவர்களின் தலைக்கனம் என்பது பெண்ணின் தொப்பை வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா? திறமை இருந்து கர்வம் இல்லாதவர்கள் நடிகை இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும். அது ரசிக்கத்தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன்.
“அவர் என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்தபோது அவர் அங்கு வந்து என்னைப் பாராட்டினார். தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்’ ‘என்றார் இயக்குனர் பேரரசு.
அது போகட்டும்…! ஆண்ணின் ரசிப்புக்காக பெண் தன்னை வருத்தி ஒட்டிய வயிறுடனும், மெல்லிய இடுப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை பெண்ணியவாதிகள் நார் நாராய் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் பெண்ணின் வயிறு மற்றும் இடுப்பு ஆராய்ச்சியாளரான பேரரசுக்குத் தெரியுமா…?
=== CASTRO RAHUL ===
2,174 Views
ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதற்காக அவரை திரையுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கிறது.
திரையுலகம் மட்டுமல்ல அவரை முன்பின் அறியாதவர்கள் கூட மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்த்துக்களுக்கு எல்லாம் பாபிசிம்ஹா தகுதியானவர்தானா?
‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ பட விஷயத்தில் பாபி சிம்ஹா நடந்து கொண்டதைப் பார்த்தால் வாழ்த்துக்கு மட்டுமல்ல… இந்த வாழ்க்கைக்கே தகுதி இல்லாதவர் என்றே தோன்றுகிறது.
அப்படி என்னய்யா செய்தாரு?
அதுக்கு முன்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கு.
ஸ்டாட்… கேமரா… ஆக்ஷன்…
எம்.மருதுபாண்டியன் என்ற இயக்குனர்தான் முதன் முறையாக பாபிசிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர்.
‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இவர் எடுக்க முன் வந்தபோது பாபிசிம்ஹாவை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது.
அந்த படத்தின் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் மருதுபாண்டியன்தான். படம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும்போதே தனது அறைத்தோழரான ‘நேரம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், ‘என் படத்துல பாபின்னு ஒரு பையன் நடிக்கிறான். அற்புதமான நடிகன். உங்க படத்துல அவனுக்கு வாய்ப்பு கொடுங்க’ என்கிறார்.
மருதுபாண்டியன் சொன்னார் என்பதற்காக பாபியை ‘நேரம்’ படத்தில் நடிக்க வைக்கிறார் அவர்.
இப்படிதான் ஆரம்பித்தது பாபி சிம்ஹாவின் கேரியர்.
நடுநடுவே போராடி ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை முடித்தார் மருதுபாண்டியன். அதற்குள் உயரத்திற்கு போய்விட்டார் பாபி.
இந்த படத்தில் டப்பிங் பேச வேண்டும் என்று அவரை அழைத்தபோது ‘இருபத்தைந்து லட்ச ரூபாய் கொடுத்தா பேசுறேன். இல்லேன்னா ஸாரி’ என்று பாபி கூற, அப்போதுதான் பாபி எவ்வளவு பெரிய நடிகர் என்பதையே உணர்ந்தார் மருதுபாண்டியன்.
‘இந்த படம் ரிலீஸ் ஆகி லாபம் வரட்டும். கண்டிப்பா நீங்க கேட்கிற பணத்தை நான் கொடுக்கிறேன். இப்போதைக்கு படத்தை ஏடிஎம் என்ற நிறுவனம்தான் வெளியிடுகிறது. அதனால் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்றாராம் மருதுபாண்டியன்.
‘
அப்படின்னா இந்த படத்தின் லாபத்தில் எனக்கு பாதி பங்கு கொடுப்பேன்னு அக்ரிமென்ட்ல சைன் பண்ணி கொடுங்க. அதே மாதிரி படம் வெளிவந்ததும் கணக்கு வழக்குகளை எங்கிட்ட முறையா ஒப்படைக்கணும். அதுக்கெல்லாம் சம்மதிச்சா நான் டப்பிங் பேசுறேன்’ பாபி சிம்ஹா சொன்னதை அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்த மருதுபாண்டியன் கூட ஏற்றுக் கொள்வார் – வேறு வழியில்லாமல்.
படம் தரமாக வந்திருக்கிறது. உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொன்ன படம் என்பதற்காக ரசனை உள்ளத்தோடு படத்தை வெளியிடும் ஏ.டி.எம் நிறுவனம் அதற்கு எப்படி ஒப்புக் கொள்ளும்?
சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் பாபியை சமாதானப்படுத்த முன் வந்தும், ‘லாபத்தில் ஐம்பது சதவீதம் கொடுங்க. இல்லேன்னா இருபத்தைந்து லட்சம் பணம் கொடுங்க. இரண்டும் இல்லேன்னா முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாபிசிம்ஹா.
இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. இது குறித்து பாபியை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், ‘அந்த படத்தை பற்றி பேசாதீங்க’ என்று கூறி எஸ்கேப் ஆகி வருகிறார் அவர்.
சிறந்த நடிகரான பாபி சிம்ஹா…. பணத்துக்காக இப்படி பாவி சிம்ஹா ஆவதுதான் வருத்தமாக இருக்கிறது.
- === CASTRO RAHUL ===
2,661 Views
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (எ) அப்துல் ஹாலிக், சில மாதங்களுக்குமுன், முன்னறிவிப்பு எதுவுமின்றி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சப்ரூன் என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அப்போது முதல் அவர் செய்தியாளர்களைச் சந்திக்காமலும், படவிழாக்களில் கலந்து கொள்ளாமலும், ஊடக வெளிச்சம் படாத தொலைவில் ஒதுங்கியே இருந்து வந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஞாயிறன்று (29ஆம் தேதி) மாலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சமீபநாட்களாக நீங்கள் செய்தியாளர்களை சந்திக்க தயங்குகிறீர்களே… என்ன காரணம்?
எப்போதுமே நான் அதிகம் பேசுபவன் இல்லை. எனவே நான் ஆரம்பத்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் என்னை நானே அடைத்துக் கொண்டேன். மற்றபடி, நான் செய்தியாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை.
உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?
மாஷா அல்லா! என் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.
உங்களது மதமாற்றம், தற்போதைய திருமணம் ஆகியவற்றில் உங்கள் அப்பா இளையராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறதே…?
அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்துகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. ‘உனக்கு அமைதி கிடைக்கிறது என்றால் செய்’ என்றுதான் சொன்னார்.
அதுபோல, என்னுடைய திருமணம் என் அப்பா சம்மதத்துடன் தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாகத் தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டார் தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று கோரிக்கை வந்தது. நான் அப்பாவிடம் போன் போட்டு இது பற்றி சொன்னேன். ‘இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்துகொள்ள முடியாது. நீ சென்னை திரும்பியவுடன் கண்டிப்பாக சந்திக்கலாம்’ என்றார். அதன்படி, திருமணமான மறுநாளே சென்னை வந்து, அப்பாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்றாலும், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
திலீப்குமார் மதம் மாறியபின் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார். ஆனால் நீங்கள் மதம் மாறிய பிறகும் அப்துல் ஹாலிக் என்ற பெயரை பயன்படுத்தாமல், யுவன் ஷங்கர் ராஜாவாகவே இருக்கிறீர்களே…?
கீ-போர்டு பிளேயராக இருந்த திலீப்குமார், திரைப்பட இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பாகவே மதம் மாறிவிட்டார். ஆகவே, அவர் முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானாகவே அறிமுகம் ஆனார். ஆனால் நான் அப்படி அல்ல. யுவன் ஷங்கர் ராஜாவாக அறிமுகம் ஆனேன். இப்போதும் அதே பெயராலேயே அறியப்படுகிறேன். அப்படியிருக்கும்போது, இப்போது பெயரை மாற்றினால் ரசிகர்கள் என்னோடு கனெக்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பெயரை மாற்றவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்துக்கான உங்கள் இசையமைப்பில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால் ஒரு பாடலுக்கு தமன் இசை அமைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறதே?
உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தமன், ‘நான் யுவனின் இசையமைப்பில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இது குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, ‘ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும்போது பண்ணலாம்’ என்று கூறியிருந்தேன்.
‘மாஸ்’ படத்திற்கு நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்து விட்டதால், ஒரு பாடல் உடனே அவசரமாக வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது நான் பிஸியாக இருந்ததால், அந்த பாடலுக்கு நான் மெட்டு மட்டும் போட்டு கொடுத்தேன். தமன் அதற்கு இசை வடிவம் கொடுத்தார். அதாவது ட்யூன் என்னுடையது. ஆர்கஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்தது தமன். அவ்வளவுதான்.
7,245 Views
4,184 Views
1,889 Views
2,533 Views
16,491 Views