Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘லிங்கா’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து நாளிதழ் ஒன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அவரது அந்த பேட்டியிலிரு ந்து சில பகுதிகள்:-


சமீபத்தில் 
ஓ… காதல் கண்மணி படத்துக்காக நீங்கள் எழுதிஇசையமைத்து பாடியமென்டல் மனதில்‘ பாடலுக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

அது ஒரு மென்மையான, ஜாலியான பாடல். பாடலாசிரியர் வைரமுத்து அப்போது ஊரில் இல்லை. ஆனால் மணிரத்னத்துக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இதற்கு முன்னர் ‘அலைபாயுதே’ படத்தில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலை சேர்ந்து எழுதியுள்ளோம். எனவே மீண்டும் அப்படி ஒரு சூழல் எங்களுக்கு அமைந்தது.


அது எப்படி மணிரத்னம் மட்டும் உங்களிடமிருந்து விசேஷமான இசையை பெறுகிறார்
?

அவர்தான் என்னை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது மணி, வைரமுத்து, நான் என நாங்கள் மூவரும் தனியாக ஒரு பிராண்ட் (Brand) ஆகிவிட்டோம். நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வேலை செய்யலாம் என்று நினைத்தால்கூட முடியாது. ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு அப்படி. அது ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தர நினைக்கிறோம்.


நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள்
இந்தி படம் ஒன்றை தயாரிக்கிறீர்கள். இசை அல்லாத மற்ற துறைகளுக்கு செல்வதன் காரணம் என்ன?

இந்திய சினிமாவில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக என்னுடைய வளர்ச்சி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா எனப் பார்க்கிறேன். ஒன்று வெற்றி பெற்றால் அதையே அனைவரும் செய்கின்றனர். ஆனால கலைக்காக ஒரு சிலரே இருக்கின்றனர். என்னால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. மக்களுக்கு என்ன பிடிக்கும், நமது இசையில் தொலைந்து போன சுவை என இரண்டுக்குமான ஒரு சமநிலையை நான் தேடுகிறேன். அனைத்து அம்சங்களிலும் இந்த சமநிலை எட்ட முடியுமா என்று பார்க்க கடந்த 4 வருடங்களாக இதற்காக உழைத்து வருகிறேன்.


நீங்கள் இசையமைத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோது எவ்வளவு ஏமாற்றம் இருக்கும்
சென்ற வருடம் லிங்கா’, ‘காவியத் தலைவன் ஆகிய படங்கள் அப்படி அமைந்தன.

நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன். நான் இயற்கையாக விரும்பும் (கலையை) ஒன்றை வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக வேலைப்பளுவில், அழுத்தங்களோடு வேலை செய்வது நல்லதல்ல.


லிங்கா அதில் ஒன்று என ஒப்புக்கொள்கிறீர்களா
?

சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடவேண்டிய நிர்பந்தம். அந்தப் படத்தை பொருத்தவரையில் என்ன ஆனது என மக்களுக்குத் தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். இசைக் கலைவை, பின்னணி இசைக் கோர்ப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ‘காவியத் தலைவன்’ வேலையும் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. அது அசந்தர்ப்பமான சூழல்.


சில தரப்பு மக்கள்
உங்கள் இசை 90-களில் இருந்தது போல இல்லை என கூறுகிறார்கள்

எனக்குப் பெருமையாக உள்ளது. என்னிடம் ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்துள்ளதே (சிரிக்கிறார்)


அத்தகைய கருத்துகளை கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்
?

ஒரு படைப்பாளியாக நான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். எனது அன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். நீங்கள் ரசித்த ஒரு முன்னாள் நடிகையிடம் இன்று சென்று, “எனக்கு உங்களை பிடிக்காமல் போய்விட்டது” எனக் கூற முடியுமா?


வசந்தபாலனோடு இணைந்து வேலை செய்தீர்கள். இந்த வருடம் விக்ரம் குமாரோடு இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இயக்குநர்களோடு எளிதாக வேலை செய்வதை விட்டு
உங்களுக்கு பரிச்சயமில்லாத இயக்குநர்களுடன் வேலை செய்வது ஏன்?

ஒரு கட்டத்துக்கு மேல் சிலரிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்டதும் கூட. மணிரத்னம், அஷுடோஷ், ஷங்கர் போன்றவர்களிடம் அது நல்ல விஷயம். ஏனென்றால் அவர்கள் எனக்கு புதிய சவால்களைத் தருகின்றனர். எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் தான் இயக்குகின்றனர். புதிய இயக்குநர்கள் புதிய விஷயங்களை கண்டறிய இடம் தருகிறார்கள்.


முகம்மது‘ என்ற உங்கள் இரானிய படத்தின் நிலை எனன் அதை நீங்கள் ஒப்புக் கொண்ட காரணம் என்ன?

வேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் முடியவில்லை. இரானிய படங்களின் ரசிகன் நான். முக்கியமாக மஜித் மஜிதியின் படங்களுக்கு. ஒருநாள் இம்தியாஸ் அலி என்னைக் கூப்பிட்டார். யூடிவி நிறுவனத்திடம், மஜிதி, அவருடைய படத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமா வரலாற்றில் குறிப்பிட்டத்தக்க திரைப்படமாக அது இருக்கும்.


ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைப்பது எளிதாக இருந்திருக்காதே

அவரது எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. ஒருவகையில் அது நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள விரும்பினேன். அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள், காட்சிகளை எப்படி எழுதுகிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இரண்டு முறை இரானுக்கு பயணம் செய்துள்ளேன். இரண்டுமே அற்புதமான அனுபவமாக இருந்தன.


சென்னையின் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த ஒரு சாதாரண மாணவனான நீங்கள் தற்போது சர்வதேச அளவில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளீர்கள். இதற்காக எப்படி உங்களை மாற்றிக் கொண்டீர்கள்
?

வானிலையும், மண்டலமும் மாறும்போது அனைத்தும் மாறும். அங்கு 3 அடுக்கு உடைகள் அணிந்து கொள்வேன். ஸ்டூடியோக்களை பொருத்தவரை இங்கிருப்பது போன்ற வசதிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. இசை குறிப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கேற்றார் போல சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பழக்கப்பட எனக்கு 10 வருடங்கள் ஆனது.


நீங்கள் தனியாக இசையமைப்பதற்கு முன்னர் இளையராஜாவின் குழுவில் இசைக் கலைஞராக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்களா
?

அவரை கடைசியாக ஓர் இசை விழாவில் சந்தித்தேன். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது விழாக்கள், திரையிடல்கள் என எங்காவது பல்வேறு இசையமைப்பாளர்களை அடிக்கடி எதேச்சையாக சந்தித்து வருகிறேன். இங்கு சென்னையில் என்னால் அப்படி வெளியில் செல்ல முடிவதில்லை. வேலை அல்லது குடும்பம் அல்லது என் இசைப்பள்ளி என எப்போதுமே ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பேன். எனவே வெளியில் செல்ல நேரம் இல்லை. எங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உள்ளது.


இசையைப் பொருத்தவரை தற்போது தமிழில் பல புதிய இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். நீங்களே புகழ்ந்துள்ள சந்தோஷ் நாராயண்
மேலும் அனிருத்,ஜி.வி.பிரகாஷ்இந்தியிலும் பலர் உருவாகியுள்ளனர். திறமையானவர்கள் கையில்தான் இசை இப்போது இருக்கிறது என சொல்லமுடியுமா?

இசையில் கண்டறிய நிறைய உள்ளது. வெறும் ஹிட் பாடல்களை மட்டுமே தரவேண்டும் என கேட்கக் கூடாது. காலத்தைக் கடந்த இசையைத் தர ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவருக்கென ஒரு விதியை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் இசையை நாம் ஏன் இன்னும் விரும்புகிறோம்? ஏனென்றால் அவை காலத்தை வென்றவை. ரசிகர்களுக்கு இன்னமும் அவற்றுடன் ஓர் இணைப்பு உள்ளது. நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். அதேதான் இளம் இசையமைப்பாளர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.



=== CASTRO RAHUL ===

11,835 Views
காதலை தினுசு தினுசாக காட்டியது சினிமா கண்டவுடனே காதல். பார்க்காமலே காதல், விளையாட்டு காதல், விபரீத காதல் , சைக்கோ காதல் ,இப்படி நிறைய பார்துவிட்டோம் இது இவ்வாறு இருக்க விரைவில் "கைபேசிக் காதல்" என்ற படம் வெளிவர இருக்கின்றது.


இதில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்காமல் ஒரு செல்போனை காதலிக்கின்றார். அதனூடே வாழ்கின்றார், உலகம் அவரை பைத்தியக்காரனாக பார்க்கின்றது. ஆனால் செல்போன் அவரின் வாழ்க்கைக்கு பாதை காட்டுகின்றது .


ஹீரோவின் மனநிலையை மாற்றி தன் மீது காதல்கொள்ள போராடுவது தான் ஹீரேயின் வேலை.
இப்படி ஒரு படத்தை புதுமுக இருக்குனர் திம்மம்பள்ளி சந்த்ரா என்பவர் இயக்குகிறார்.

கைபேசி காதல்’ படம் குறித்து இதன் இயக்குனர் திம்மம்பள்ளி சந்த்ரா கூறுகையில், “இன்றைய மனிதர்களுக்கு ஆடம்பர பொருட்கள்மேல் மோகம் அதிகரித்துள்ளது. சக மனிதர்கள் மேல் வைக்கும் அன்பு, பாசம், நேசம் குறைந்துவிட்டது.

“கைபேசியை காதலியாக நினைத்து காதலிக்கும் ஒரு இளைஞனின் விபரீதமான மனநிலையை விளக்கும் கதையே இப்படம். கைபேசியை அதிகம் நேசித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.

“ஹீரோவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பது அவனது கைபேசிதான். அவனது வாழ்க்கையின் மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அவனது செல்போனே தீர்மானிக்கிறது. அதனால் அவனுக்கு தனது செல்போன் மீதே காதல் வந்துவிடுகிறது.

“அதன்பிறகு அவனது வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகளால் விபரீதமான முடிவுகள் ஏற்படுகின்றன. இப்படியொரு வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் படம்தான் ‘கைபேசி காதல்’. இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.

ஒளிப்பதிவு– ராகேஷ்.சி.திலக்

இசை– விஜய் கிருஷ்ணா

தயாரிப்பு நிர்வாகம் – சிவக்குமார்

தயாரிப்பு – த.சக்திவேல்

எழுத்து, இயக்கம்– திம்மம்பள்ளி சந்த்ரா


==CASTRO RAHUL ==

2,207 Views

ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரக நடிக்கிறாராம் ‘ஜெயம்’ ரவி.


எனவே டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் ‘டண்டணக்கா…’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஒரு பாடலை வைத்தனர்.


டி.இமான் இசை அமைப்பில், அனிருத் பாட, ‘டங்கா மாரி’ புகழ் ரோகேஷ் எழுதிய இப்பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது.


தல என்றால் அஜித்குமார்தான். ஆனால் ‘டண்டணக்கா’ பாடலில் டி.ராஜேந்தரை தல என்று பெருமையாகக் குறிப்பிட்டு அந்த பாடல் முழுக்க டி.ராஜேந்தரை பெருமைப்படுத்தி உள்ளனர்.


இதற்காக டி.ராஜேந்தர் ரோமியோ ஜூலியட் பட இயக்குநரையும் ஜெயம் ரவியையும் பாராட்டி இருக்க வேண்டும். ஆனால் டி.ராஜேந்தரோ ‘ரோமியோ ஜூலியட்’ படத் தயாரிப்பாளர் இயக்குநர் இசையமைப்பாளருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.


அதில் ‘டண்டணக்கா’ பாடலை தொடர்ந்து ஒலிபரப்பவும், புரொமோஷன் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.


இதனால் ‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டண்டணக்கா பாடலை படமாக்க தயாராகி வந்த ‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினருக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. டி.ராஜேந்தரின் எதிர்ப்பு காரணமாக டண்டணக்கா பாடல்காட்சியை படமாக்கும் திட்டத்தை தற்போது கைவிட்டுவிட்டனர்.


டண்டணக்கா என்ற வார்த்தை டி.ராஜேந்தருக்கு சொந்தமானது அல்ல, தவிர அந்தப்பாடலில் அவரை இழிவுபடுத்தும்படியான வரிகளும் இல்லை.


இதெல்லாம் தெரிந்தும்… எம்.ஏ.தமிழ் படித்த டி.ராஜேந்தர் டண்டணக்கா பாடலை தடை செய்ய நினைக்கிறார் என்றால்….

பின்னணி என்னவாக இருக்கும்?


‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் கதாநாயகி ஹன்சிகா.

சிம்புவின் முன்னாள் காதலி.


‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம்ரவி உடன் படு நெருக்கமாக நடித்திருக்கிறார்.


அதை சகித்துக்கொள்ள முடியாத சிம்பு தன் அப்பாவை குத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார் என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள்.


===== CASTRO RAHUL ====

10,330 Views

==CASTRO RAHUL ==

சந்தேகமே இல்லை…. “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “இது கதிர்வேலன் காதல்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.


கட்சி அபிமானத்தைத்தாண்டி அவருக்கென்று ரசிகர்களும் உருவாகிவிட்டனர். ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள உதயநிதியின் அடுத்தப் படமான ‘நண்பேன்டா’வுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் செம எதிர்பார்ப்பு.


வேறு சில படங்களுக்கும் கோடையில் வெளிவந்தாலும்…. நண்பேன்டா படம் ‘ரியல் சம்மர் ட்ரீட்’டாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் மக்கள்.


உதயநிதி, சந்தானம் கூட்டணியில் ஏற்கனவே வெளி வந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “இது கதிர்வேலன் காதல்” இரண்டு படங்களுமே ரசிகர்களை மகிழ்வித்தன.


நண்பேன்டா படத்தில் ஒருபடி மேலேபோய் உதயநிதி – சந்தானம் இருவரும் இன்னும் கூடுதலாக கலக்கி இருக்கிறார்களாம்.

முந்தைய படங்களில் படம் முழுக்க உதயநிதி உடனேயே பயணித்தார் சந்தானம்.


இந்த படத்தில் சந்தானம் உதயநிதி இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் காமெடிக்கு குறைவு இருக்காது என்கிறார் உதயநிதி.

நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு 95 நாட்கள் நடைபெற்றுள்ளது. சந்தானம் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம்.சந்தானம் இல்லாத காட்சிகளிலும் பல இடங்களில் தனி முத்திரை பதித்துள்ளாராம்.


காமெடி… காதல் காட்சிகளில் மட்டுமல்ல நண்பேன்டா படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் வெளையாடி இருக்கிறாராம் உதயநிதி.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜெகதீஷ், ஓகே ஓகே பட இயக்குநர் ஆர். ராஜேஷிடம் உதவியாளராக இருந்தவர்.


நண்பேன்டா படத்தைப் பற்றி இயக்குநர் ஜெகதீஷ் என்ன சொல்கிறார்?

“ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மாதிரி இந்தப் படத்துல காமெடி இருந்தாலும் அதுக்கும்மேலே உதயநிதி சார் டான்ஸ், நடிப்புன்னு எல்லாத்துலயும் அசத்தியிருக்காரு. அப்புறம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானமும் கலக்கியிருக்காங்க. இந்தப் படத்தை குடும்பத்தோட, வந்து இந்த விடுமுறையில கலகலப்பா கொண்டாட்டமா பார்த்து ரசிக்கலாம்.” என்கிறார்.


நண்பேன்டா படம் தமிழகம் முழுக்க 400க்கும் மேற்பட்ட தியட்டர்களில் வெளியாகிறது.

 
2,756 Views


சினிமாவைப் பார்த்துவிட்டுத்தான் கொலை செய்ததாகவும்… கொள்ளையடித்ததாகவும் குற்றவாளிகள் சொல்கிறார்கள். சினிமாக்காரர்களோ சமுதாயத்தில் நடப்பதைத்தான் படமாக எடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


கடந்த சில வருடங்களுக்கு முன் டெல்லியில் நடந்த ‘நிர்பயா’ கற்பழிப்பு சம்பவத்தை மறந்திருக்க மாட்டோம். ஓடும் பஸ்ஸில் வைத்து ஜோதி என்ற இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது.


அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் படம்தான் – ரு.

அதென்ன ரு?

ரு என்றால் 5 என்று அர்த்தமாம்.


5 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள். இந்த வழக்கு வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போக, கடுப்பாகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், அந்த ஐந்து குற்றவாளிகளையும் சாமர்த்தியமாக காலி பண்ணுகிறான்.


சின்னத் திரையில் அறிமுகமாகி, பெரிய திரைக்கு வந்து ‘பட்டாளம்’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த இர்பான் ரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


ரக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சதாசிவம் இப்படத்தை இயக்குகிறார்.

ஆனந்த் – வீணா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

==CASTRO RAHUL ==

7,577 Views

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டே போகின்றன.அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்வதே இல்லை.


அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் பண்ணியபடி பணத்தை அள்ளிக்கொண்டிருக்கிறார்.வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என சிம்பு நடித்த படங்கள் க்யூவில் காத்திருக்கின்றன.


இவை தவிர செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.இந்நிலையில் ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்து இயக்கும் படத்தில் சிம்புவை ஹீரோவாக கமிட் பண்ணி இருக்கிறார்.


கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் சிம்பு கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசை அமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்!


தன்னுடைய கதையை அனிருத்திடம் கிருத்திகா சொன்னபோது, கதையைக் கேட்ட அனிருத், தன் நண்பரான சிம்புவை சஜஸ்ட் செய்திருக்கிறார்.

அதன் பிறகே தன் படத்துக்கு சிம்புவை கமிட் பண்ணினாராம் கிருத்திகா.

அனிருத் சிபாரிசு செய்தார் என்பதற்காக சேட்டையைக் காட்டாமல் இருப்பாரா சிம்பு?


==CASTRO RAHUL ==

3,336 Views

==CASTRO RAHUL ==

வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் – “எலி”.முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம்  இது.


1960களின் பிண்ணனியில் உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார்.கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.


பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான  வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள்,வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள்  கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, அங்கே வசனகாட்சிகள்  மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.


மேலும் பாடல் காட்சிக்கான செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக, மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்பெரும் நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.


எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தாராம் நடிகை சதா. (அய்யோ பாவம்)


கவர்ச்சியில் மட்டுமல்ல காமெடியிலும் கலக்கி இருக்கிறாராம் சதா.

சதாவின் நகைச்சுவை காட்சிகள் புது அனுபவம் தரும் என்கிறார் இயக்குநர்.தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் எலி படத்தின் அனைத்து பணிகளும் ஏப்ரல் இறுதியில் நிறைவு பெற்று மே மாதம் எலி திரைக்கு வருகிறது.


குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்கும் வண்ணம் நகைச்சுவைக்கு மட்டும் முதலிடம் தந்து எடுக்கப்படும்  இந்தப்படத்தில் சிறப்பம்சம் ஒன்றும் உண்டாம்.

என்னா அது?

பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாளிக்குமோ, அதே போன்று சண்டைக் காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறாராம் வடிவேலு.

படம் வரட்டும் பார்ப்போம்…


5,023 Views
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விஜய். எத்தனையோ கிண்டல்கள் கேலிகள் நடந்தாலும், உண்மையில் உழைப்பால் முன்னேறித்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார் என்பதை நாமும் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. இந்நிலையில், புலி படத்தில் வேகமாக நடித்துவரும் விஜய், அந்தப் படம் நிறைவடைய இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் 1980களில் பிரபலமாக நடித்த முன்னணி நடிகை ஒருவரும் விஜய்யுடன் இந்தப் படத்தில் இணையவுள்ளார்கள். பயப்படாதீங்க, அதாவது இந்த விஜய்யின் புதிய படத்தில் அந்த பிரபலமான மாஜி நடிகையும் இணையவுள்ளார். அவர் வேறு யாருமல்ல. நடிகை ராதிகா சரத்குமார் தான்.

முதன் முறையாக விஜய்யுடன் இணைந்து ராதிகா நடிக்கவுள்ளார் என்பதும் முக்கியமானது. அத்தோடு படத்தில் நடிக்கும் ஏனையவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

-கோடம்பாக்கக் குருவி-
11,376 Views
நம்ம உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசனும் அடிக்கடி சிக்கல்களில் சிக்குவது வழமையாகிவிட்டது. அவருக்கும் பிரச்சினைகளுக்கும் அவ்வளவு அன்பு போலும்.
இப்பொழுது, புதிய படங்களில் நடிக்க, ஸ்ருதிஹாசனுக்கு ஐதராபாத் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது.கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தை பி.வி.பி நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக, படத்தில் இருந்து அவர் திடீர் என விலகினார். இதை எதிர்த்து பிவிபி நிறுவனம் ஹைதராபாத் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.அதில், ஸ்ருதியின் கால்ஷீட் படி, மற்ற நடிகர்களிடமும் கால்ஷீட் வாங்கியிருந்தோம். பாதி படம் முடிவடைந்த நிலையில் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் மெயில் அனுப்பி இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஸ்ருதியால் மற்ற நடிகர்களிடம் வாங்கிய திகதிகளையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. பல கோடி ரூபாய் பண இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குப் பதிவு செய்யப்பட வேன்டும். அடுத்த தீர்ப்பு வரும்வரை எந்த நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒப்புக்கொண்ட படத்தை முடிக்கும் முன், வேறு பட நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆக, அம்மணிக்கும் ஆப்பு தயாராகி விட்டது. என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா?

-கோடம்பாக்கக் குருவி-
15,904 Views
ஏற்கெனவே தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டிக்கு திரண்டு வந்து ஆதரவு தருமாறு நியூ சீலாந்து ரசிகர்களுக்கு கடிதம் எழுதி கலகலப்பாக்கியவர் நியூ சீலாந்தின் அணித் தலைவர் பிரெண்டன் மக்கலம்.

லீவு குடுங்கையா என கெஞ்சும் பிரெண்டன் மக்கலம்

இப்போது நாளை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பேர்னில் இடம்பெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தனது நியூ சீலாந்து அணிக்கு ஆதரவு தருமாறு, இந்திய வாழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

To every cricket fan in India

என்று ஆரம்பிக்கும் கடிதத்தில், உலகக்கிண்ணம் வெல்லும் உங்கள் தீராத பசி எனக்கும் தெரியும். அதேபோல நாளைய தினம் நியூ சீலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான போட்டி.
உங்கள் ஆதரவும் எங்கள் அணிக்குத் தேவை என்று இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுள்ளார் மக்கலம்.



மக்கலமுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பர யுக்திகளில் ஒன்றாக இது இருந்தபோதும், 
இந்திய ரசிகர்களை மட்டும் விளித்து எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம் மற்ற நாட்டு ரசிகர்களை கொஞ்சமாவது சீண்டும் என்று கருதப்படுகிறது.

நாளை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் நாட்டு பேதம் எல்லாம் மறந்து, முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு வரும் நியூ சீலாந்து அணிக்கே அனேக நாட்டு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று பலரும் எண்ணியிருக்கும் நிலையில் பிரெண்டன் மக்கலாமின் திருப்புமுனைக் கடிதம் வெளியாகியிருக்கிறது.
10,853 Views

குற்றம் கடிதல் படம் வெளியாகும் முன்பே அதற்கு விருதும் பாராட்டுகளும் குவிவதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிறிஸ்டி.

'குற்றம் கடிதல்' எனும் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதினை வென்றுள்ளது. ஜேஎஸ்கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தை க்றிஸ் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மா ஜி இயக்கியுள்ளார்.

 
ஏற்கெனவே இப்படம் கோவா, ஜிம்பாப்வே, பெங்களூர், மும்பை ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது.


கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்' திரைப்படத்திற்கு அடுத்து, இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையை பெற்றுள்ளது ஜேஎஸ்கே நிறுவனம்.


இதனிடையே குற்றம் கடிதல் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ்டி நன்றி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "குற்றம் கடிதல் திரைப்படம் வெளியாகும் முன்னரே எனக்கும், எங்களின் படத்திற்கும் தாங்கள் அளித்த உற்சாகத்திற்கும் உறுதுணைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


எனக்கும், ஜே சதீஷ் குமார் அவர்களுக்கும் குற்றம் கடிதல் படத்திற்காக 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது தாங்கள் அறிந்ததே. தற்போது எங்களுக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக, தமிழ் படத்திற்கான தேசிய விருது குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

இத்தருணத்தில், உங்களுக்கும், தேசிய விருது தேர்வு குழுவினருக்கும், படக்குழுவினருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.


=======CASTRO RAHUL =======

327 Views
ஒரு தெய்வம் தந்த பூவே பாடலோடு தனது இசையுலக வாழ்வை தொடங்கியவர் பாடகி சின்மயி. பாடகி மட்டுமில்லாமல், நயன்தாரா, தமன்னா, சமந்தா, சமீரா ரெட்டி போன்ற நடிகைகளுக்கு பல படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார்.
இப்பொழுதும் பல இசையமைப்பாளர்களின் பிடித்தமான பாடகியாக நிறையப் பாடல்களைப் பாடிவரும் ஒருவர் சின்மயி.

இந்நிலையில், சின்மயி நிருபர்களோடு பேசியுள்ளார். நான் எப்போதுமே சுதந்திரமாக பேசுவதற்கு ஆதரவு கொடுக்கின்றவள். அதேசமயம் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் அவதூறு பரப்புகின்றவர்களுக்கும் நான் எதிரானவள்.

மனதளவில் நான் உறுதியாக இல்லாமல் இருந்திருந்தாலோ, எனது அம்மா மற்றும் நலவிரும்பிகளும் ஆதரவுகாட்டாமல் இருந்திருந்தாலோ, நான் அன்று நடந்த அவதூறு பரப்பும் செய்தியோடு தற்கொலை செய்திருப்பேன். அவ்வளவு மனதளவில் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.

எனவே, இப்படியான ஜென்மங்களை நாம்தான் இணங்க கண்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும். இதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், பாடகியும் பின்னணிக் கலைஞருமான சின்மயி கூறியுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
353 Views
நியூசிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் -மைக்கல் கிளார்க்.

உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி எதிர்வரும் 29 ம் திகதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பிரெண்டன் மக்கலம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மைக்கல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பங்கெடுக்கவுள்ளன .

இந்த இரண்டு அணிகளும் குழு 'A' யில் இடம்பெற்றிருந்தன,குழுநிலை ஆட்டத்தில் இரு அணிகளுக்குமிடையிலான் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமாக 151 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது..

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டியில் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்த 2 அணிகளும் இதுவரை மெல்போர்ன் மைதானத்தில் பங்கெடுத்த போட்டிகளில் 4 முறை நியூசிலாந்து அணியும் 15 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*T.T
242 Views
62வது தேசிய விருது வழங்கும் விருதுகள் விபரப் பட்டியில், சிறுவர்களுக்கான சிறந்த படமாக, காக்காமுட்டை படமும், சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக அதிலே நடித்த ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய நட்சத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த குழந்தை நட்சத்திரங்களுக்கும் அவர்களின் நடிப்புக்கும் பாரட்டுக்களை தெரிவிக்கும் முகமாக, நடிகர் தனுஷ் தனது செலவில் தங்கச் சங்கிலி அன்பளிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு படம் வெளியாகி நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கோடம்பாக்கக் குருவி-
280 Views
இந்த மாதம் சின்ன பட்ஜெட் படங்கள் மழையாக பொழிந்தன. கோடை மழை மாதிரி திரையை தொட்ட மறுநாளே அனைத்துப் படங்களும் மாயமாக மறைந்து, ஏற்கனவே பலவீனமாக உள்ள தமிழ் சினிமாவை மேலும் பதட்டத்துக்குள்ளாக்கின. 
 

இந்த மாதம் சின்னப் படங்கள் என்றால் ஏப்ரலில் தமிழ் சினிமாவை சோதிக்க இருப்பவை பெரிய படங்கள். 





ஏப்ரல் 2 -ஆம் தேதியே நெருக்கடி தொடங்குகிறது. அன்று உதயநிதி தயாரித்து நடித்திருக்கும் நண்பேன்டா, விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கொம்பன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. 

 
பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் நண்பேன்டா, கொம்பன் இரண்டுமே பெரிய படங்கள். விஜயகாந்தின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சகாப்தத்தை சின்ன படங்களின் பட்டியலில் சேர்க்க இயலாது. பட்ஜெட்டும் பெரிய படங்களுக்கு இணையாக உள்ளது. 

 
நண்பேன்டாவை தயாரித்திருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்டும், கொம்பனை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீனும் தமிழக திரையரங்குகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள். ரெட் ஜெயண்ட் படங்களை தயாரிப்பதுடன், தரமான படங்களை வெளியிடவும் செய்கிறது.

சமீபத்தில் வெற்றி பெற்ற, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தை ரெட் ஜெயண்ட்தான் விநியோகித்தது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள மாஸ் விரைவில் வெளிவரவிருப்பதால் ஸ்டுடியோ கிரீனின் கொம்பனை திரையரங்குகளால் தவிர்க்க முடியாது.
 

தமிழகத்தில் புதுப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள சுமார் 800 திரையரங்குகளில் 90 சதவீத திரையரங்குகளை இவ்விரு படங்களே பங்குப் போட்டுக் கொள்ள துடிக்கின்றன. மீதமுள்ளவைதான் சகாப்தத்துக்கு.

 
இந்த மூன்று படங்கள் தவிர ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி ஒருவருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கும் பூலோகம் படமும் ஏப்ரல் 2 திரைக்கு வரும் முயற்சியில் உள்ளது. அந்தப் படமும் போட்டிக்கு வந்தால் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் குறையும்



======== CASTRO RAHUL =======
603 Views
[1]      «      1709   |   1710   |   1711      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top