சூர்யா நடிப்பில் விரைவில் உருவாகவுள்ள சிங்கம் 3 படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குனர் ஹரி, அந்த படத்தை பற்றிய சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் ஒரு படம் தொடர்ச்சியாக ஒரே பெயரில் ஒரே நடிகர்கள், ஒரே தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனரால் மூன்று பாகங்கள் இயக்கப்படுவது இதுவே முதல்முறை. முதல் இரண்டு பாகங்களில் நாயகியாக நடித்த அனுஷ்காவோடு இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராதாரவி, நாசர் ஆகியோர்கள் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். சூர்யாவின் கதாபாத்திரம் முந்தைய பாகங்களை விட இதில் கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளது. "தப்பு பண்ணுபவர்களை கைது செய்வது மட்டும் போலீஸ் வேலையில்லை, தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ்' என்ற பஞ்ச் வசனமும் இந்த படத்தில் உண்டு.
சிங்கம் 3" படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விஜய், அஜித் படங்களுக்கு பின்னர் சூர்யாவின் படத்திற்கு அனிருத் முதன்முதலாக இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், அதன்பின்னர் கோவா மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும். இவ்வாறு இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-