வைகைப்புயல்! தமிழக அரசியலில் புயல் கிளப்பியவர் ..நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள் ..இவரும் வாயால் கெட்டவர் தான் ..தமிழக அரசியலில் கருத்துக்கூறி கடைசியில் திரை வாய்ப்புக்களை இழந்தவர் ...
இந்த நிலையில் அவரது அரசியல் பிரவேசம் பற்றி அண்மையில் ஊடகவியலாளர்கள் வினவியபோது '' எதிர் காலத்தில் நான் அரசியலில் பிரவேசிக்கலாம் ..ஆனால் அது பற்றி இப்போது எதையும் கூறமுடியாது. எனது இப்போதைய முழுக்கவனமும் சினிமாவைப் பற்றியது தான், எனது அடுத்த திரைப்படத்தில் முதல்வர் பாத்திரம் ஏற்று நடிக்கின்றேன் அதுவே எனது இப்போதைய அரசியல் பிரவேசம் " எனத் தெரிவித்துள்ளார்
சென்னையில் நேற்றையதினம் "எலி" திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார் ..இதேவேளை இப்படத்தின் பெயர் விஜயின் புலி எனும் பெயரிட்க்கு போட்டியாக வைக்கப்பட்ட பெயர் அல்ல என்றும், எனது அடுத்த திரைப்படத்திற்கு கரப்பான் பூச்சி என்று கூட சிலவேளைகளில் வைக்களாம்..அதனை வைத்து நீங்கள் எவ்வித தவறான முடிவுகளையும் எடுத்து விடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்தார் ...இச்சந்திப்பின் போது ''எலி'' பற்றி கருத்து தெரிவித்த வடிவேல் இத் திரைப்படம் நிச்சயமாக முழுக்குடும்பத்தையும் மகிழ்விக்கும் என்றும் தெரிவித்தார் .
யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் வடிவேல் சதா பிரதீப் ராவத் ஆகியோர் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது