முன்னணி நடிகர் விக்ரமின் மகன் துருவ் 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மகான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த துருவ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த 'பைசன்' படம் அவரை இன்னும் பிரபலமாக்கியது.
‘பைசன்’ திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி அறிமுக இயக்குநர் கரண் அரவிந்தகுமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.