63,769 Views
சேரனின் ஆட்டோகிராப் படத்தை மிஞ்சும் அளவுக்கு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது – நடிகை நயன்தாராவின் நிஜக்காதல்(?) கதை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல மலையாளப்பட இயக்குநர் ஒருவருடன் ‘நெருக்க்க்க்க்கமாக’ இருந்தவர்தான் நயன்தாரா.
நடிகைக்கும் – இயக்குநருக்கும் உள்ள ‘உறவை’ காதலாக கருத முடியாதுதான். வேண்டுமானால், நீங்களே ஏதாவது நினைத்து கொள்ளுங்கள் ஆனாலும் இந்த செய்திக்காக, அந்த இயக்குநரை நயன்தாராவின் முதல் காதலர் என்று கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
தமிழில் நடிக்க வந்த பிறகு அந்த மலையாளப்பட இயக்குநரின் காதலை தெருவில் போட்டுவிட்டு, வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கு உதட்டைக் கவ்வக் கொடுத்தார் நயன்தாரா. எனவே சிம்புவை நயன்தாராவின் இரண்டாவது காதலர் என்று எடுத்துக் கொள்வோம்.
பார்க் ஹோட்டல் அறையிலும், வளர்ந்த சிம்பு – நயன்தாராவின் காதல் ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. சில மாதங்களில் பிரபுதேவா இயக்கத்தில் வில்லு என்ற படத்தில் நடித்தார். பாடல் காட்சிக்காக பாங்கொக் போனபோது இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டு திகுதிகுவென எரிந்தது. நயன்தாராவுக்காக தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.
டயானா குரியன் என்ற இயற்பெயர் கொண்ட கிறிஸ்தவப்பெண்ணான நயன்தாரா, பிரபுதேவாவுக்காக இந்துவாக மதம் மாறினார். தன் கையில் பிரபு என்று பச்சைக்குத்திக் கொள்ளுமளவுக்கு பிரபுதேவா மீது வெறித்தனமான காதலில் கட்டுண்டு கிடந்தார். நடிப்பிலிருந்து விலகி திருமண வாழ்க்கைக்கும் தயாரானார்.
இத்தனைக்குப் பிறகும் ஒருநாள் யாருமே எதிர்பாரதவகையில், பிரபுதேவா உடனான காதலை சட்டென முறித்துக்கொண்டார் நயன்தாரா. அதன் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தபோது உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாரா காதல் வயப்பட்டதாகவும், அதன் காரணமாக உதயநிதி குடும்பத்தில் மிகப்பெரிய பூகம்பமே ஏற்பட்டதாகவும்… பின்னர் உதயநிதியின் பக்கமே வரக்கூடாது என்று நயன்தாரா மிரட்டப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
இது குறித்து ஆதாரபூர்வமான தகவல் ஏதுமில்லை என்பதால் உதயநிதியை நயன்தாராவின் காதலர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம். இந்நிலையில்தான் நயன்தாராவின் புதிய காதல் பற்றியும்…. புதிய காதலர் பற்றியும் நம்பகமான ஒரு தகவல் நம் காதுக்கு வந்தது.
யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?
சிம்புவின் நண்பரும், அவரை வைத்து போடா போடி படத்தை இயக்கியவருமான விக்னேஷ் சிவன்தான் நயன்தாராவின் புதிய காதலர். என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற “அதாரு.. அதாரு” உட்பட சில பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு வேடத்திலும் திரையில் தோன்றினார்.
தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர். இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் நாளடைவில் அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். எந்தளவுக்கு தெரியுமா?
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நயன்தாராவின் MAKEUP அறையினுள் புகுந்தால் பல மணி நேரங்கள் கழித்தே வெளியே வருவாராம். அதற்கான காரணம் யூனிட்டில் உள்ளவர்களுக்கே ஆரம்பத்தில் புரியவில்லை. பிறகுதான்… காரணம் தெரிய வந்திருக்கிறது. நயன்தாராவின் நான்காவது காதலராகிவிட்டார் விக்னேஷ் சிவன்.
தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்த நயன்தாரா, சமீபத்தில் ரசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலைதீவுக்கு உல்லாசப்பயணம் சென்று வந்திருக்கிறார். ஏறக்குறைய இந்தப் பயணத்தை தேனிலவுபோல் இருவரும் அனுபவித்து வந்ததாகவும் கேள்வி.
நயன்தாராவின் வாழ்க்கையில் கடந்த காலங்களில் எத்தனையோ காதல்கள்….!
எத்தனையோ காதலர்கள்….!
நயன்தாராவைப் போலவே விக்னேஷ் சிவனும் கேரளாவைச் சேர்ந்தவர். மலையாளி.
ஏற்கனவே சிம்பு என்ற தமிழராலும், பிரபுதேவா என்ற கன்னடராலும் ஏமாற்றப்பட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, மலையாளியான விக்னேஷ் சிவன் தன்னை ஏமாற்ற மாட்டார் என்றும், தனக்கு பொருத்தமாக இருப்பார் என்று நம்புகிறாராம். அந்த நம்பிக்கையில்தான் கேளரத்தில் உள்ள தன்னுடைய பூர்வீகக் கிராமத்துக்கு விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்று தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, அங்குள்ள தேவாலயத்தில் சிறப்பு பூஜையும் செய்து வந்திருக்கிறார்.
இதை எல்லாம் வைத்து, நயன்தாராவின் காதல் கதை விக்னேஷ் சிவனோடு முடிவடைந்துவிடும், நானும் ரௌடிதான் படம் ரிலீஸ் ஆன பிறகு இருவரும் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
நயன்தாராவை நன்கு அறிந்த வேறு சிலரோ… கன்னித்தீவு முடிந்தாலும்… நயன்தாராவின் காதல் கதைகள் முடியாது. தொடரும் என்கிறார்கள்.
டோக்கன் நம்பர் 5 யாருப்பா?
===CASTRO RAHUL ===